கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் புகையிரத பாதை மீள்- புனரமைப்பு பணி காரணமாக அநுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையிலான இடை நிறுத்தப்பட்ட புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கிறது.
வடக்கு தெற்கை இணைக்கும் புகையிரத சேவை ஜூலை 15ம் திகதி தொடக்கம் ஆரம்பமாக உள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்களம் கூறி உள்ளது. இதற்கான பரீட்சாத்த நடவடிக்கைகள் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கொழும்பு புதிய புகையிரத நேர அட்டவணை வெளியீடு கீழே உள்ளது. இந்த சேவை 15.07.2023 முதல் புகையிரத சேவை நடைபெறும் எனவும் கூறப்படுகின்றது