இறந்த நிலையில் யானையின் உடல் மீட்பு முல்லத்தீவு வன ஜீவ ராசிகள் திணைக்களத்தி உட்பட்ட பகுதியான உடையார் கட்டு தெற்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இறந்து ஐந்து நாட்கள் ஆன யானை ஒன்றின் உடல் மக்களால் வழங்கப்பட்ட தகவலுக்குஅமைய புது குடியிருப்பு போலீசார் மற்றும் மன ஜீவராசிகள் திணைக்களம் இனைந்து இன்றைய தினம் 20.08.2023 இனங்காணப்பட்டுள்ளது.

இறந்த யானையின் தந்தம் மற்றும் வால் பகுதி திருடப்பட்டுள்ளதுடன் யானையின் முன் காலில் பாரிய காயம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது யானை இறந்ததற்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை எனவும் யானை எதன் காரணத்தினால் இறந்தமை என்பதற்காக யானையின் உடல் பகுதி உடல் கூட்டு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாங்குளம் மாவட்ட வன ஜீவராசிகள் தினைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.