❇️யாழ்பாணம் சோனெழு-கோப்பாய் மத்திய பகுதியில் மகன் ஒருவர் நேற்று முன்தினம்(07) விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். முத்துத் தம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
❇️இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்று விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கியுள்ளார்.
❇️இந்நிலையில் அவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
❇️பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
❇️விஷம் அருந்திய மகன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.