யாழ் சாவகச்சேரி நகர் பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய போதே மின்சாரம் தாக்கியுள்ளது.
இவர் நுணாவில் பகுதியைச் சேர்ந்த (26) வயதுடைய கஜந்தன் என்ற இளைஞனே இவ்வாறு மின்சாரம் தாக்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்..