வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம் பிரதான வீதியில் உயிரிழந்த தம்பதிகளின் மகனின் வியாபாரநிலையம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்றயதினம் இரவு வழமைபோல அவர்களது மகனின் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
குறித்த தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச் சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த(72) வயதுடைய பதிவர்ணகுலசிங்கம் என்ற முதியவரும் அவரது மனைவியான (68)வயதான கனகலட்சுமி என்பவருமே இவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார் குறித்த சம்பவத்தில் (5) பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…
