Headlines

சுவிஸில் பரபரப்பு: பயணிகளுடன் ரயிலை கடத்திய மர்ம நபர் சுட்டுக்கொலை!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

சுவிஸில் பயணிகளுடன் ரயிலை கடத்திய நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். மேலும் பணயக்கைதிகளையும் மீட்டுள்ளனர்.

சுவிஸில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்றிரவு (09-02-2024) நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ளார். 

அந்த மர்ம நபர் பயணிகள் மற்றும் நடத்துனரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி ரயிலில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் நடத்துனர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் முதலில் வாட்ஸ்அப் மூலம் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த நபர் முதலில் ஈரானின் பிரதான மொழியான பார்சி மொழியிலும் அதன் பிறகு ஆங்கிலத்திலும் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த பேச்சுவார்த்தை சுமார் 4 மணித்தியாலமாக தொடர்ந்த நிலையில், இறுதியில் ரயிலில் அதிரடியாக பொலிஸார் நுழைந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த நபர் கோடாரியால் பொலிஸாரை தாக்க பாய்ந்ததால் வேறு வழியில்லாமல் பொலிஸார் அந்த கடத்தல்காரனை சுட்டுக் கொன்றனர். 

இதையடுத்து பணயக்கைதிகளாக இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply