யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது.
கடந்த திங்கட்கிழமை ( 19) பேருந்தினால் பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை , சாரதி அவசரமாக பேருந்தினை நகர்த்திமையால், பெண் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

வேகத்தில் செல்லும் சாரதிகள் தொடர்பில் முறையிடலாம்
இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் , சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் , சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.