கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டொரண்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டொரண்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் (Consulate General of Sri Lanka) அறிக்கை வெளியிட்டுள்ளது.