
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மலர்ச்சாலை மீது இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தாக்குதலை நடாத்தியுள்ளது.
இச்சம்பவம் (15-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த மலர்ச்சாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், மலர்ச்சாலையின் உரிமையாளரின் மனைவியும் வாள்களினால் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.