கனடாவில், மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அதனால் ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் பலியான பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

திங்கட்கிழமையன்று, இரவு 8.10 மணியளவில், ஒன்ராறியோவிலுள்ள Clarington என்னுமிடத்தில், மதுபானக்கடை ஒன்றில் ஒருவர் திருட முயல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அந்த நபரைப் பிடிக்க முயல, அவர் வேன் ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளார்.