Headlines

பாகிஸ்தான் ஈரான் மீது துப்பாக்கிச் சூடு ; 4 பொதுமக்கள் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பாகிஸ்தான்- ஈரான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் ஈரான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்தனர்.இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுளளது.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தெஹ்சில் மஷ்கில் பச்சா ராய் என்ற இடத்தில் நடைபெற்றது.பலுசிஸ்தான் துணை ராணுவப் படை அதிகாரிகள், இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஈரான் மீது துப்பாக்கிச் சூடு ; 4 பொதுமக்கள் பலி | Pakistan Fired At Iran 4 Civilians Killed

ஆனால், ஈரான் அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை. ஈரான் படைகள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி ஈரான் வான்தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது பின்னர் இருநாட்டு டிப்ளோமேட்டிக் மூலமாக பதற்றத்தை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

Leave a Reply